comparemela.com


Print
கொரோனா உயிர்ப்பலி மீண்டும் 1000-க்குள் வந்தது. தினசரி பாதிப்பும் சற்றே சரிந்துள்ளது.
பதிவு: ஜூலை
12, 
2021
09:51
AM
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. 
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்து 154 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 08 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும்724 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,08,764  ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது. 
கடந்த 24 மணிநேரத்தில் 39,649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 00 லட்சத்து 14 ஆயிரத்து 713 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.20 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,50,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரத்து 501 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
1.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத கிராமப்பகுதிகளில் 15-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
2.

Related Keywords

United States ,India ,New Delhi ,Delhi , ,Central Department Of Health Ministry ,Central Department ,Health Ministry ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,இந்தியா ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,மைய துறை ,ஆரோக்கியம் அமைச்சகம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.