நெல்லை டவுன் முப்புடாதி அம்மன் கோவிலில் சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் அம்மனுக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டு, வழிபட்டனர்.