Send
சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
வெங்கடேசன் எம்பி
சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை:
ரம்ஜான் பண்டிகையின்போது சி.பி.எஸ்.இ. தேர்வு வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டி தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கும் மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14-ந் தேதி அன்று ரம்ஜான் விடுமுறை அறிவித்துள்ளன.
ஆனால் ரம்ஜான் பண்டிகை, பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரம்ஜான் பண்டிகை திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை கணக்கில் கொள்ளாமல் சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மே 13 மற்றும் மே 15-ந் தேதிகளில் அறிவித்துள்ளது.
ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சி.பி.எஸ்.இ.க்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :